Pages

Sunday, April 11, 2010

விகிர்தி புதுவருட பிறப்பு


புதிய விகிர்தி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி எதிர்வரும் 14 ஆம் திகதி சித்திரை மாதம் முதலாம் திகதி காலை 6.57க்கு மேடலக்ணமும்இ ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் அமாவாசை திதியூம் மரண யோகமும் கூடிய சுபவேளையில் பிறக்கிறது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 5.23க்கு மீன லக்ணம் ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் அமாவாசைத் திதி மரணயோகம் கூடிய வேளையில்புதுவருடம் பிறக்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவூ 2.57 முதல் புதன்கிழமை 10.57 வரையூள்ள காலம் புண்ணிய காலமாக திருக்கணித பஞ்சாங்கமும்இ செவ்வாய்க்கிழமை பின் இரவூ 12.23 முதல் புதன் காலை 8.23 வரையூம் புண்ணிய காலம் என்றும் வாக்கிய பஞ்சாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இப்புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்து சித்திரைப் புத்தாண்டை கொண்டாடலாம். (எம்.ரி.977-10:55)

No comments:

Post a Comment


Followers